மூன்றாம் உலகப்போர்… அமெரிக்கா காலி.. 2026-ல் இந்தியாவின் தலையெழுத்து மாறுமா?… பாபா வாங்காவின் ‘டைரி’ குறிப்புகள்…!!! 

Estimated read time 1 min read

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்காவின் கணிப்புகள் எப்போதும் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.

இவரது கணிப்பின்படி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மூன்றாம் உலகப்போருக்குப் பிறகு, இந்தியா உலகின் ஒரே வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் மேற்கத்திய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு நாடு உலகத்தை ஆதிக்கம் செலுத்தும் என்றும், அது இந்தியாவாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இவரது தீர்க்கதரிசனத்தை ஆய்வு செய்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும், அதன் பிறகு உலக அரசியலமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இந்தியா முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மூன்றாம் உலகப்போரின் தாக்கத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு குறையும் வேளையில், இந்தியாவின் ஆன்மீக மற்றும் பொருளாதார பலம் உலகை வழிநடத்தும் என்பது பாபா வாங்காவின் கணிப்பாகப் பார்க்கப்படுகிறது.

2026-ல் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் இந்தப் போருக்குப் பிறகு, உலகின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் அதிக முக்கியத்துவம் பெறும் என்றும், அதன் மையப்புள்ளியாக இந்தியா விளங்கும் என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஏற்கெனவே இவர் கணித்த 9/11 தாக்குதல் மற்றும் ஒபாமா அதிபரானது போன்ற நிகழ்வுகள் உண்மையானதால், இந்தியாவின் வல்லரசு குறித்த இந்தக் கணிப்பு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author