மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Estimated read time 1 min read

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

https://youtu.be/KVcELgcwQPw?si=heF-IyvTNJuMiTcj

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் சிவராத்திரி தினத்தை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

காலை முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது பக்தர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதால், முறையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவில்லையென பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

You May Also Like

More From Author