
உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உலகமே இந்தியாவை AI தொழில்நுட்பத்தின் மையமாக பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாகவும், இது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்காது என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நிர்வாணமாக, அதாவது மக்களிடம் அம்பலப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
