இஸ்லாமாபாத் தனது அண்டை நாடுகளுக்கு எதிராக “வெளிப்படையான போரை” அறிவித்ததை அடுத்து, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிடம் பகைமையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல், வெள்ளிக்கிழமை மேலும் அதிகரித்தது, காபூல் உட்பட முக்கிய ஆப்கானிஸ்தான் நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் நடத்த, மறுபுறம் ஆப்கானிஸ்தானோ பெரிய அளவிலான எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், பெய்ஜிங் “மோதல் அதிகரிப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது” என்றும், இரு தரப்பினரும் அமைதியாக இருக்கவும், நிதானத்தை கடைப்பிடிக்கவும், விரைவில் போர்நிறுத்தத்தை அடையவும் வலியுறுத்தினார்.
ஈரானும் மத்தியாசம் செய்ய முன்வந்துள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போர்: சீனா, ரஷ்யா பதற்றத்தை குறைக்க அழைப்பு விடுத்தன
