கழுத்தை நெரிக்கும் பொருளாதாரப் பாதிப்பு? – ஈரான் போரினால் இந்தியாவுக்குக் காத்திருக்கும் ஆபத்து.. சி-வோட்டர் கணிப்பில் வெளியான உண்மை..!! 

Estimated read time 1 min read

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்தியர்களின் மனநிலை என்ன என்பதை அறிய ‘சி-வோட்டர்’ நிறுவனம் மார்ச் மாதம் ஒரு மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது.

இதில் பெரும்பாலான இந்தியர்கள் ரஷ்யாவையே இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகக் கருதுகின்றனர் (சுமார் 70%). அதே நேரத்தில், இந்தியாவிற்குப் பாகிஸ்தானை விட சீனாவே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று 44 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, சுமார் 30 சதவீத மக்கள் முழு திருப்தியுடனும், 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஓரளவு திருப்தியுடனும் உள்ளனர்.

இந்தப் போரினால் இந்தியா சந்திக்கும் பாதிப்புகள் குறித்து மக்கள் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக, 50 சதவீத மக்கள் இந்தப் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர். பொருளாதாரத்திற்கு அடுத்தபடியாக, இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அரசியலிலும் மாற்றங்களை உண்டாக்கும் என்று கணிசமானோர் கருதுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக, உலகப் போர்ச் சூழலில் இந்தியா தனது பொருளாதாரப் பாதுகாப்பிலும், சீன எல்லை விவகாரத்திலும் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதே இந்திய மக்களின் பொதுவான கருத்தாக இந்தக் கணிப்பில் வெளிப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author