மேற்கு வங்கத்தை ஊழல்களால் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் என்றும், நிச்சயம் நீதியின் முன்பாக நிறுத்துவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலம், ஹால்டியாவில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றியபோது 6 உத்தரவாதங்களை அளித்தார். அதில், மேற்குவங்கத்தில் பாஜக அரசு அமைந்தால், மோசமான அவல நிலை அகற்றப்படும் என்றும், சட்டத்தின்படி ஆட்சியை நிலைநாட்டி மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கு மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாக்கப்படும் எனவும் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் முதல் கடை நிலை ஊழியர் வரை யார் ஊழலில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்போம் எனவும் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் வாக்குறுதி அளித்தார்.
