பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாத சீனா : அமித் ஷா

பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, சீன ஆக்கிரமிப்பின் போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசாமுக்கு ‘பை-பை’ சொன்னதை அம்மாநில மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.  பிரதமர் மோடியின் ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய பாஜக தலைமையிலான அரசு, வங்கதேசத்துடனான நாட்டின் எல்லையைப் பாதுகாத்து ஊடுருவலைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஷா கூறினார். அசாமின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அவரது பாட்டி இந்திரா காந்தி அசாம் மாநிலத்திற்கு என்ன செய்தார் என்பதை மறக்க முடியுமா?   ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக அமித் ஷா குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். வரும் ஆண்டுகளில், அசாம் வளர்ந்த மாநிலமாக மாறும் என நம்புவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author