உலகச் சுற்றுச்சூழல் தினம் – ஆரோவில் நகரில் கோலாகலம்!

Estimated read time 0 min read

உலகச் சுற்றுச்சூழல் தினம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சர்வதேச நகரமான ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெற்றன. ‘

இதில் தமிழ்நாடு மற்றும் கேரளம் மாநிலத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மற்றும் அவரது மனைவி அனகா அர்லேகர் ஆகியோர், ஆரோவில் பார்வையாளர் மையத்தின் அருகே தங்கள் தாயாரின் நினைவாக மரக்கன்றுகளை நட்டனர்.

இதனையடுத்து, கேலக்ஸி திட்டத்தின்’ கீழ், ஆரோவில்லின் பசுமை பரப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், எதிர்காலத்தில் கூடுதலாக 10ஆயிரம் மரக்கன்றுகளை நடத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஆரோவில்லின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக, வெளி வட்டச் சாலையில் அமைக்கப்படவுள்ள ‘தி பிளாசா’ மையத்திற்கு ஆளுநர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி எஸ். ரவி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author