ஜூலை 20ஆம் நாள், 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் கிளை கருத்தரங்கானது செயற்கை நுண்ணறிவு சட்டக் கருத்தரங்காக நடைபெற்றது.
இதில் செயற்கை நுண்ணறிவு ஏஜென்த் சேவையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கான 10 சட்டக் கோட்பாடு பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
உள்நாட்டின் செயற்கை நுண்ணிறவு ஏஜென்த் வளர்ச்சிக் கொள்கை, சிங்கபூர், அமெரக்கா, ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளின் கண்காணிப்பு மற்றும் நடைமுறையாக்கம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, கிழக்கு சீன அரசியல் அறிவியல் மற்றும் சட்டப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு சட்ட ஆராய்ச்சிக் கழகம் இவ்வறிக்கையை இயற்றியுள்ளது.
பசுமையான வளர்ச்சி, சமநிலை மதிப்பளிப்பது, பொறுப்பு ஏற்பது ஆகிய 10 ஆட்சிமுறை கொள்கைகள், இணைப்புச் சட்ட ஆதாரம், நடைமுறையாக்க வழிகள் முதலியவை இதில் இடம்பெற்றுள்ளன. இத்துறையில் சட்டத்தின் விதிகள், கண்காணிப்பு சட்டம் இயற்றல் ஆகியவற்றுக்கு இவ்வறிக்கை நடைமுறையாக்க மாதிரிகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
