ஏபெக் என்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 33ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாடு துவங்குவதற்கு முன்பான 100ஆவது நாள் ஆகஸ்ட் 10ஆம் நாளாகும். இவ்வாண்டின் நவம்பரில் நடப்பு உச்சிமாநாடு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ளது. ஏபெக் உச்சிமாநாட்டுக்குச் சீனா, தலைமை தாங்குவது இது 3ஆவது முறையாகும். திறப்பு, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு என்ற கருப்பொருளைக் கொண்டு அதற்கான ஆயத்தப் பணிகளை ஷென்சென் நகர் மேற்கொண்டு வருகிறது.
