நிலச்சரிவு மற்றும் வெள்ளபெருக்கை தொடர்ந்து, திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கமும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
திபெத்தில் இரவு 8.15 மணியளவில் 4.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, நேபாளத்தில் இரவு 9.18 மணியளவில் 3.2 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது புதிதாக நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இருப்பினும், இந்த இரு நிலநடுக்கங்களால் எவ்வித பாதிப்புகளும் இதுவரை பதிவாகவில்லை.
