மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% எட்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் உற்பத்தித் துறை, சேவைத் துறை மற்றும் மூலதன முதலீடுகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஜிடிபி புள்ளிவிவரங்கள் குறித்த காரசார விவாதம் இந்தியா டுடே ஊடகத்தில் அரங்கேறியுள்ளது.
அந்த விவாத மேடை நிகழ்ச்சியில், முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், அரசின் புதிய அடிப்படை ஆண்டுத் திருத்தம் காரணமாகவே இந்த வளர்ச்சி உயர்ந்து காட்சியளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ஜிடிபி வளர்ச்சி 7.8% உண்மையா அல்லது மாயையா?
