நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய சீன நாட்டவர் ஒருவர் மீட்பு

Estimated read time 0 min read

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய சீன நாட்டவர் ஒருவரை நேபாள மீட்புக் குழுவினர் சனிக்கிழமை மீட்டதாக நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட நீர்மின் நிலைய பகுதியில் இருந்து 11 நாட்களுக்குப் பிறகு, தென் கொரியாவின் பேரிடர் நிபுணர் குழுவுடன் இணைந்து நேபாள ராணுவம் அந்தச் சீன நாட்டவரை மீட்டது. மீட்கப்பட்ட நபர் மேல் சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். நேபாளத்துக்கான சீனத் தூதர் ஷாங் மா மிங் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தார்.

போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிப் படுகைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, நீர்மின் திட்டப் பணிகள் நடைபெற்று வந்த சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியிருந்தவர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, 20 நேபாள ராணுவ வீரர்கள் மற்றும் திட்டப் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு மீட்புக் குழு தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக நேபாள ராணுவம் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தது. பல்வேறு நீர்மின் திட்ட கட்டமைப்புகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை, சீனா, இந்தியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து நேபாள ராணுவம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author