மத்திய அரசின் ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டங்களில் நடத்தப்பட்ட முதல் முதன்மையான கணக்காய்வு அறிக்கையில், தமிழ்நாட்டில் பெருமளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் 11 ஸ்மார்ட் நகரங்களில் 7 நகரங்களில் 2015 முதல் 2023 வரையிலான காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து செயல்திறன் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அசல் ஸ்மார்ட் சிட்டி திட்ட முன்மொழிவுகளில் சேர்க்கப்பட்டிருந்த ரூ.1,602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதே வேளையில், எவ்விதத் திட்டமிடலும் இல்லாத 44 புதிய திட்டங்கள் ரூ.623.86 கோடி செலவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.10,000 கோடி நிதி முறைகேடு: CAG அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்
