பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.
150க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்துள்ளன என்று உள்ளூர் அதிகாரிகள் கணித்துள்ளதை அடுத்து, பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம் என்று ஐ.நா குடியேற்ற அமைப்பின் தலைவரான செர்ஹான் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார்.
“தற்போது 670 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கு அடியில் புதைந்திருப்பதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்” என்று அக்டோப்ராக் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.
முதலில் 100 பேர் மட்டுமே இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்பட்டது. இன்று வரை ஐந்து உடல்கள் மற்றும் ஆறாவது பாதிக்கப்பட்டவரின் ஒரு கால் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.