சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள உருகுவே அரசுத் தலைவர் லாகால்லேவுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 22ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
2023ஆம் ஆண்டு, சீன-உருகுவே உறவின் வரலாற்றில் சிறப்பான ஓராண்டாகும். இவ்வாண்டில் இருநாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் உருகுவே இணைந்துள்ள 5ஆவது ஆண்டு நிறைவும் வரவேற்கப்பட்டுள்ளன என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
சீனத் தேசமும் உருகுவே தேசமும் ஒற்றுமை மற்றும் நட்புறவைப் பாராட்டுகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் இருநாடுகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு செழிப்பாக வளர்ந்து வருகின்றன. தற்போது இருதரப்பு உறவை ஆழமாக்குவது இருநாடுகளின் பொது கருத்தாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இருநாடுகள் பன்முக நெடுநோக்கு கூட்டுறவை நிறுவுவதாகவும் அவர் உருகுவே அரசுத் தலைவருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.