சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவினர்கள், மே 29ஆம் நாள், கல்வி பிரச்சினை குறித்து பயிலரங்கு நடத்தினர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், கல்வியின் மூலம் சீன ஆற்றலை வலுப்படுத்துவது குறித்து உரை நிகழ்த்தினார்.
திறப்பு மற்றும் வளர்ச்சிக் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, செல்வாக்குமிக்க உலகக் கல்வி மையமாக சீனா மாற வேண்டும். மேலதிகமான புத்தாக்கம் மற்றும் முக்கிய தொழில் நுட்பத் துறையில் முக்கிய முன்னேற்றங்களைப் பெற்று, மனித குலப் பண்பாட்டின் முன்னேற்றத்திற்கு புதிய பங்கு ஆற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.