கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: 175 பேர் பாதிப்பு  

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதால் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
175 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதால், உள்ளூர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தபடி, 126 பேர் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர், 104 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
மாவட்டத்தில் 5 வார்டுகளில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பிற கூட்டங்கள் மூடப்பட்டுள்ளன.
மக்கள் காய்ச்சலின் பரவலைக் கட்டுப்படுத்த முககவசம் அணிய வேண்டும் எனவும், கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

More From Author