ஈரானில் தொடக்கப்பள்ளி மீது ஏவுகணை தாக்குதல்…! 24 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… 60 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு..!! 

Estimated read time 0 min read

ஈரான் நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இன்று அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஜெனிவாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகளிடையே சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், பேச்சுவார்த்தை திடீரென முறிந்தது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்க ராணுவம் இஸ்ரேலியப் படைகளுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈரான் நகரங்களில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததே தாக்குதலுக்கு முக்கிய காரணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து இத்தாக்குதலை நடத்துகின்றன.

இந்த நிலையில் ஈரான் நாட்டின் மினாப் நகரில் உள்ள ஒரு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலின் போது தொடக்கப்பள்ளி ஒன்றின் மீது ஏவுகணை விழுந்தது. இந்த தாக்குதலில் 24 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 60 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author