விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் : பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Estimated read time 1 min read

விமான சாகச நிகழ்ச்சியை காண மக்கள் குவிந்ததால் பேருந்து, ரயில்மகளில்  கூட்டம் அலைமோதியது. இதேபோல்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை பார்ப்பதற்காக மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

மெரினா கடற்கரைக்கு வாகனங்களில் சென்றால் அதிக சிரமம்  என்பதால் பறக்கும் ரெயில்களில் செல்ல கூட்டம் கூடியது. சென்னை புறறகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வேளச்சேரி உள்ளிட்ட பறக்கும் ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு சென்ற்னர். அதிக கூட்டம் கூடியதால் டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட கியூ காணப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இதேபோல் நிகழ்ச்சி முடிந்து ஒரே நேரத்தில் பொதுமக்கள் ரயில் நிலையம் வந்ததால் பெரும் நெருக்கடி காணப்பட்டது. மேலும் அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதேபோல் வார நாட்களை போல் பேருந்துகளிலும் கடும் நெரிசல் காணப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author