இன்று 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..

Estimated read time 0 min read

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு மற்றும்‌ அதனை ஒட்டிய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அத்துடன் குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், இலங்கை மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக , இன்று ( அக். 10) தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, நாமக்கல்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கரூர்‌, திருச்சராப்பள்ளி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாளை ( அக்.11) தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும் எனவும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சுராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, இண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌ மற்றும்‌ சிவகங்கை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author