மத்திய அரசு நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு 2025 இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை (சென்சஸ்) நடத்த உள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரியமாக ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சென்சஸ், கொரோனா தொற்றுநோய் காரணமாக அதன் அசல் 2021 அட்டவணையில் இருந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை 2025இல் தொடங்கி 2026 வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முடிவுகளுக்கு பிறகு, 2028 க்குள் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்படும் எனத் தெரிகிறது.
இந்த மறுவரையறையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் நிலையில், 2029இல் இந்த புதிய மக்களவை தொகுதிகளுடன் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
