தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10:00 மணி வரையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் வாங்கிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.