காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மாநில அரசின் பட்ஜெட் அறிக்கை தாக்களின்போது வெள்ளிக்கிழமை (மார்ச் 7) இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் தொடங்கும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
மேகதாது அணை திட்டம் கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
இந்த அணை குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ள நீர் ஓட்டத்தை நிர்வகிக்கவும் உதவும் என்று கர்நாடகா வாதிடுகிறது.
மேகதாது அணைக்கான ஆயத்த பணிகள் நிறைவு என கர்நாடக முதல்வர் அறிவிப்பு
