துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி  

Estimated read time 0 min read

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) அதிகாலையில் உடல்நலக்குறைவு மற்றும் மார்பு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
73 வயதான அவர் மருத்துவ பரிசோதனைக்காக அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவர்களின் கூற்றுப்படி, தன்கர் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. எனினும், தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.
இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நரங் தலைமையிலான நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, தன்கரின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனை விரைவில் கூடுதல் தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author