போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை!

Estimated read time 1 min read

விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஓட்டுநர்கள் 24 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவும் வேண்டும். மேலும், அவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் மற்றும் குறைந்தது 18 மாத ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடத்துநர்கள் 24 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்கவும் வேண்டும். அத்துடன், அவர்கள் நடத்துநர் உரிமம், முதலுதவி சான்றிதழ் மற்றும் பொது சேவை பேட்ஜ் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறையால் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் அனைத்து பேருந்துகளையும் இயக்க முடியும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறையால் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் அனைத்து பேருந்துகளையும் இயக்க முடியும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

நிரந்தர நியமனங்கள் செய்யப்படும் வரை இது தற்காலிக ஏற்பாடு என்று அமைச்சர் உறுதியளித்திருந்தாலும், மனிதவள நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது. அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதை உறுதி செய்ய காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டங்கள், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், விழுப்புரம் கோட்டம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 667 ஓட்டுநர்களையும், 724 நடத்துநர்களையும் நியமிக்க உள்ளது. அதேபோல், சேலம் கோட்டம் 142 ஓட்டுநர்களையும், 134 நடத்துநர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author