வெளுத்து வாங்கும் கனமழை…! “34 பேர் பலி”… இமாச்சல பிரதேசத்தில் தொடரும் சோகம்.!! 

Estimated read time 0 min read

இமாச்சல பிரதேசத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சி துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறிய போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த 20 ம் தேதி முதல் தற்போது வரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் 17 பேர் மலையிலும், 17 பேர் கனமழையினால் ஏற்பட்ட சாலை விபத்துகளிலும் உயிரிழந்துள்ளனர். பெய்து வரும் பருவமழையால் பல மாவட்டங்களில் நிலச்சரிவுகள், மின் இணைப்பு, வெள்ளநீர் தேக்கம் போன்ற பல சேதங்கள் ஏற்பட்டு அப்பகுதிகளில் வசித்து வரும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து தரம்ஷாலா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 9 பேர் அடித்து செல்லப்பட்ட நிலையில், 6 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது. தற்போது ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author