இன்று இங்கிலாந்து சென்றார் பிரதமர் மோடி: FTA ஒப்பந்தம் கையெழுத்தாகிறது  

Estimated read time 1 min read

இங்கிலாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திடுவது உள்ளிட்ட பல ராஜதந்திர நிகழ்ச்சிகள் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி லண்டன் சென்றடைந்தார்.
இந்திய புலம்பெயர்ந்தோரின் உற்சாக வரவேற்புடன் இன்று அவர் அங்கே தரையிறங்கினார்.
தொடர்ந்து, பிரதமர் தனது சக பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்துவார், மேலும் மன்னர் சார்லஸையும் சந்திப்பார் என கூறப்பட்டுள்ளது.
பிரதமரை விமான நிலையத்தில் இந்தோ-பசிபிக் பகுதிக்குப் பொறுப்பான இங்கிலாந்து வெளியுறவு அலுவலக அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் விக்ரம் டோர்சாய்சாமி மற்றும் புது தில்லிக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் லிண்டி கேமரூன் ஆகியோர் வரவேற்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author