நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 18-ந்தேதி (இன்று) முதல் வரும் 27-ந்தேதிவரை அக்னிவீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் அக்னிவீரர் டிரேஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கவுள்ளவர்கள் தங்களிடம் உள்ள அனுமதி அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
கடந்த மார்ச் 11-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் (www.joinindianarmy.nic.in) கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட்ட முறைப்படி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் தேர்வில் பங்கேற்க முடியாது.
நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 18-ந்தேதி (இன்று), தூத்துக்குடி மாவட்டம் 19-ந்தேதி, கன்னியாகுமரி மாவட்டம் 20-ந்தேதி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் 21-ந்தேதி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் 22-ந்தேதி, தென்காசி, நெல்லை மாவட்டங்கள் 23-ந்தேதி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் 24-ந்தேதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25-ந்தேதியன்று தேர்வு நடைபெறும்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிட வேண்டும். சீக்கியர்கள் தவிர மற்ற தேர்வாளர்கள் முகச்சவரம் செய்திருக்க வேண்டும். தாடியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதற்காக போதிய அளவில் தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை மற்றும் தானியங்கி முறையில் உள்ளவை. எனவே இடைத்தரகர்களை அணுகி மோசடியில் சிக்காதீர்கள். நேர்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது.
தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற புரட்சிகரமான இயக்குநர், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா(84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் கலாசார மையத்தில் தொடங்கி தற்போது நடைபெற்று [மேலும்…]
2026ஆம் ஆண்டு புதிய எரியாற்றல் சந்தையின் நீண்டகால முன்னாய்வு அறிக்கை ஒன்றைப் புளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் அண்மையில் வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2030ஆம் ஆண்டுக்குள், [மேலும்…]
சீனத் தேசிய மனித உரிமை செயற்பாட்டு திட்டம்(2026-2030) 11ஆம் நாள் நடைபெற்ற 2026·உலக மனித உரிமை மேலாண்மை உயர் மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் [மேலும்…]
உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து திருவிழா தற்பொழுது தொடங்கவுள்ளது. இந்தியாவில் இதன் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் [மேலும்…]
வியாழக்கிழமை (ஜூன் 11) வர்த்தகத்தின் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கீழ் மட்டங்களில் காணப்பட்ட ஆதரவு காரணமாகத் [மேலும்…]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் [மேலும்…]