நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 18-ந்தேதி (இன்று) முதல் வரும் 27-ந்தேதிவரை அக்னிவீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் அக்னிவீரர் டிரேஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கவுள்ளவர்கள் தங்களிடம் உள்ள அனுமதி அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
கடந்த மார்ச் 11-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் (www.joinindianarmy.nic.in) கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட்ட முறைப்படி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் தேர்வில் பங்கேற்க முடியாது.
நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 18-ந்தேதி (இன்று), தூத்துக்குடி மாவட்டம் 19-ந்தேதி, கன்னியாகுமரி மாவட்டம் 20-ந்தேதி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் 21-ந்தேதி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் 22-ந்தேதி, தென்காசி, நெல்லை மாவட்டங்கள் 23-ந்தேதி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் 24-ந்தேதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25-ந்தேதியன்று தேர்வு நடைபெறும்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிட வேண்டும். சீக்கியர்கள் தவிர மற்ற தேர்வாளர்கள் முகச்சவரம் செய்திருக்க வேண்டும். தாடியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதற்காக போதிய அளவில் தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை மற்றும் தானியங்கி முறையில் உள்ளவை. எனவே இடைத்தரகர்களை அணுகி மோசடியில் சிக்காதீர்கள். நேர்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது.
ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் டென்னிஸ் தொடரில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டத்தை வென்றார். ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் [மேலும்…]
காசாவிலுள்ள போர் நிறுத்தத்தின்முதலாவது கட்டம் குறித்து பன்னாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் 13ஆம் நாள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷெய்க் நகரில் உச்சிமாநாட்டை நடத்தினர். [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம்நாள் காலை பெய்ஜிங்கில் இலங்கை தலைமை அமைச்சர் அமரசூரியா அம்மையாரைச் சந்தித்துரையாடினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இலங்கை நாட்டின் [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பாராகிளைடிங் பயிற்சியில் விமானிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த [மேலும்…]
சீனாவில் ஷியோமி நிறுவனத்தின் மின்சாரக் கார் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் [மேலும்…]
தெலங்கான மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைச் செய்து கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் சேதமடைந்தன. தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. [மேலும்…]
டெல்லியில் நடந்த 2வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா, மேற்கிந்திய தீவுகளை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. [மேலும்…]
வெனிசுலாவில் கனமழைக் காரணமாக தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராகஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 850 கிலோ மீட்டர் தொலைவில் [மேலும்…]