நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 18-ந்தேதி (இன்று) முதல் வரும் 27-ந்தேதிவரை அக்னிவீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் அக்னிவீரர் டிரேஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கவுள்ளவர்கள் தங்களிடம் உள்ள அனுமதி அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
கடந்த மார்ச் 11-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் (www.joinindianarmy.nic.in) கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட்ட முறைப்படி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் தேர்வில் பங்கேற்க முடியாது.
நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 18-ந்தேதி (இன்று), தூத்துக்குடி மாவட்டம் 19-ந்தேதி, கன்னியாகுமரி மாவட்டம் 20-ந்தேதி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் 21-ந்தேதி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் 22-ந்தேதி, தென்காசி, நெல்லை மாவட்டங்கள் 23-ந்தேதி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் 24-ந்தேதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25-ந்தேதியன்று தேர்வு நடைபெறும்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிட வேண்டும். சீக்கியர்கள் தவிர மற்ற தேர்வாளர்கள் முகச்சவரம் செய்திருக்க வேண்டும். தாடியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதற்காக போதிய அளவில் தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை மற்றும் தானியங்கி முறையில் உள்ளவை. எனவே இடைத்தரகர்களை அணுகி மோசடியில் சிக்காதீர்கள். நேர்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது.
போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக [மேலும்…]
மேஷம் இன்று தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் நல்லபடி முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். உத்தியோகத்தில் [மேலும்…]
நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் [மேலும்…]
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.74 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளியியல் [மேலும்…]
மேற்குவங்க ஆளுநராக பணியாற்றி வந்த சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநில ஆளுநர்களில் அதிரடி மாற்றங்களைச் செய்து குடியரசுத் தலைவர் [மேலும்…]
சீனாவில் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பு மொத்தமும், ஒரே ஒரு தவறான முடிவால் சுக்குநூறாகியுள்ளது. “வெள்ளி விலை கிடுகிடுவென ஏறும், நாம் குறுகிய [மேலும்…]