நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 18-ந்தேதி (இன்று) முதல் வரும் 27-ந்தேதிவரை அக்னிவீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் அக்னிவீரர் டிரேஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கவுள்ளவர்கள் தங்களிடம் உள்ள அனுமதி அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
கடந்த மார்ச் 11-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் (www.joinindianarmy.nic.in) கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட்ட முறைப்படி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் தேர்வில் பங்கேற்க முடியாது.
நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 18-ந்தேதி (இன்று), தூத்துக்குடி மாவட்டம் 19-ந்தேதி, கன்னியாகுமரி மாவட்டம் 20-ந்தேதி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் 21-ந்தேதி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் 22-ந்தேதி, தென்காசி, நெல்லை மாவட்டங்கள் 23-ந்தேதி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் 24-ந்தேதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25-ந்தேதியன்று தேர்வு நடைபெறும்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிட வேண்டும். சீக்கியர்கள் தவிர மற்ற தேர்வாளர்கள் முகச்சவரம் செய்திருக்க வேண்டும். தாடியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதற்காக போதிய அளவில் தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை மற்றும் தானியங்கி முறையில் உள்ளவை. எனவே இடைத்தரகர்களை அணுகி மோசடியில் சிக்காதீர்கள். நேர்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, டிசம்பர் 2ஆம் நாள், மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பவைச் செயலாளர் ஷோய்கு [மேலும்…]
ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா [மேலும்…]
நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் [மேலும்…]
65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]