நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 18-ந்தேதி (இன்று) முதல் வரும் 27-ந்தேதிவரை அக்னிவீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் அக்னிவீரர் டிரேஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கவுள்ளவர்கள் தங்களிடம் உள்ள அனுமதி அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
கடந்த மார்ச் 11-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் (www.joinindianarmy.nic.in) கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட்ட முறைப்படி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் தேர்வில் பங்கேற்க முடியாது.
நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 18-ந்தேதி (இன்று), தூத்துக்குடி மாவட்டம் 19-ந்தேதி, கன்னியாகுமரி மாவட்டம் 20-ந்தேதி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் 21-ந்தேதி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் 22-ந்தேதி, தென்காசி, நெல்லை மாவட்டங்கள் 23-ந்தேதி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் 24-ந்தேதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25-ந்தேதியன்று தேர்வு நடைபெறும்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிட வேண்டும். சீக்கியர்கள் தவிர மற்ற தேர்வாளர்கள் முகச்சவரம் செய்திருக்க வேண்டும். தாடியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதற்காக போதிய அளவில் தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை மற்றும் தானியங்கி முறையில் உள்ளவை. எனவே இடைத்தரகர்களை அணுகி மோசடியில் சிக்காதீர்கள். நேர்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது.
சங்க இலக்கியங்களைப் பெருமளவு பதிப்பித்து வெளியிட்ட பெருமை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சேரும். இக்கழகத்தின் ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையாபிள்ளை அவர்கள் தேர்ந்த உரையாசிரியர்களைக் [மேலும்…]
பிரபல பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் சாலமன் பாப்பையா (90) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சன் தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 [மேலும்…]
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. வார விடுமுறை மற்றும் விநாயகர் [மேலும்…]
சென்னை : “அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே” என்று பட்டிமன்ற மேடைகளில் தனது கணீர்க்குரலால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களைக் [மேலும்…]
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், [மேலும்…]
இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். [மேலும்…]
சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த சுமார் 70 ரவுடிகளை, ஒரே இரவில் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் [மேலும்…]
இந்தியா – ஜப்பான் நாடுகளின் 75 வருட உறவைக் கொண்டாடும் வகையில், வரும் செப்டம்பர் 22 அன்று ஜப்பானில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா [மேலும்…]