நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 18-ந்தேதி (இன்று) முதல் வரும் 27-ந்தேதிவரை அக்னிவீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் அக்னிவீரர் டிரேஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கவுள்ளவர்கள் தங்களிடம் உள்ள அனுமதி அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
கடந்த மார்ச் 11-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் (www.joinindianarmy.nic.in) கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட்ட முறைப்படி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் தேர்வில் பங்கேற்க முடியாது.
நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 18-ந்தேதி (இன்று), தூத்துக்குடி மாவட்டம் 19-ந்தேதி, கன்னியாகுமரி மாவட்டம் 20-ந்தேதி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் 21-ந்தேதி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் 22-ந்தேதி, தென்காசி, நெல்லை மாவட்டங்கள் 23-ந்தேதி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் 24-ந்தேதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25-ந்தேதியன்று தேர்வு நடைபெறும்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிட வேண்டும். சீக்கியர்கள் தவிர மற்ற தேர்வாளர்கள் முகச்சவரம் செய்திருக்க வேண்டும். தாடியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதற்காக போதிய அளவில் தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை மற்றும் தானியங்கி முறையில் உள்ளவை. எனவே இடைத்தரகர்களை அணுகி மோசடியில் சிக்காதீர்கள். நேர்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது.
தனது திரைப்படங்களுக்குக் கிடைக்கும் தேசிய விருதுகள் மற்றும் அதுதொடர்பாக எழுந்துள்ள விவாதங்கள் குறித்து நடிகர் தனுஷ் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார். சமீபத்தில் வெளியான சில தரமான [மேலும்…]
மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மகளிருக்கான இலவசப் பயணத் [மேலும்…]
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமடைந்திருந்த இராணுவ மோதல்கள், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. உலகின் மிக [மேலும்…]
கிளாஸ்கோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனை படைத்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது [மேலும்…]
கனடாவில் உள்ள நயாகரா-ஆன்-தி-லேக் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை [மேலும்…]