தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!  

Estimated read time 0 min read

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (நவம்பர் 6, 2025) காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த சூழலில், இன்றும், நாளையும் (நவம்பர் 7, 8) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

You May Also Like

More From Author