சீன விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியது.
அதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நிலவின் மேற்பரப்பில், அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு துருப்பிடிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் தேவை. ஆனால், இவையிரண்டும் நிலவில் அதிகளவில் கிடையாது. அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக என்ன இருக்கும்?
இதற்கான விடையை அவர்கள் அந்த அறிக்கையில் அளித்துள்ளனர். இந்த துருப்பிடித்தலுக்கு பூமியே காரணம். பூமியின் வளி மண்டலத்தில் இருந்து காற்றானது நிலவுக்கு பயணித்து இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
இதனை அவர்கள் ஆய்வகத்தில் செயற்கையான முறையில் பரிசோதனை செய்து கண்டறிந்து உள்ளனர். இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின்போது, நிலவின் துருவ பகுதிகளில் ஹெமடைட் இருந்தது என கண்டறியப்பட்டது.
இதனை விஞ்ஞானிகள் முன்பே அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த துருப்பிடித்தலை புரிந்து கொள்வதன் வழியே வருங்கால நிலவு தொடர்பான திட்டங்களில் அது தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் டென்னிஸ் தொடரில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டத்தை வென்றார். ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் [மேலும்…]
காசாவிலுள்ள போர் நிறுத்தத்தின்முதலாவது கட்டம் குறித்து பன்னாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் 13ஆம் நாள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷெய்க் நகரில் உச்சிமாநாட்டை நடத்தினர். [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம்நாள் காலை பெய்ஜிங்கில் இலங்கை தலைமை அமைச்சர் அமரசூரியா அம்மையாரைச் சந்தித்துரையாடினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இலங்கை நாட்டின் [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பாராகிளைடிங் பயிற்சியில் விமானிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த [மேலும்…]
சீனாவில் ஷியோமி நிறுவனத்தின் மின்சாரக் கார் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் [மேலும்…]
தெலங்கான மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைச் செய்து கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் சேதமடைந்தன. தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. [மேலும்…]
டெல்லியில் நடந்த 2வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா, மேற்கிந்திய தீவுகளை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. [மேலும்…]
வெனிசுலாவில் கனமழைக் காரணமாக தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராகஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 850 கிலோ மீட்டர் தொலைவில் [மேலும்…]