சீன விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியது.
அதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நிலவின் மேற்பரப்பில், அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு துருப்பிடிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் தேவை. ஆனால், இவையிரண்டும் நிலவில் அதிகளவில் கிடையாது. அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக என்ன இருக்கும்?
இதற்கான விடையை அவர்கள் அந்த அறிக்கையில் அளித்துள்ளனர். இந்த துருப்பிடித்தலுக்கு பூமியே காரணம். பூமியின் வளி மண்டலத்தில் இருந்து காற்றானது நிலவுக்கு பயணித்து இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
இதனை அவர்கள் ஆய்வகத்தில் செயற்கையான முறையில் பரிசோதனை செய்து கண்டறிந்து உள்ளனர். இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின்போது, நிலவின் துருவ பகுதிகளில் ஹெமடைட் இருந்தது என கண்டறியப்பட்டது.
இதனை விஞ்ஞானிகள் முன்பே அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த துருப்பிடித்தலை புரிந்து கொள்வதன் வழியே வருங்கால நிலவு தொடர்பான திட்டங்களில் அது தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட்டுகளை முற்றிலுமாக அழிப்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மிக [மேலும்…]
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் [மேலும்…]
ஆம்னி பேருந்துக்கு தனி பர்மிட், கட்டணம் நிர்ணயம் செய்ய அரசு மறுத்து வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
யாகாவா ராயினும் நாகாக்க… என்ற திருக்குறளை எக்ஸ் வலைதளத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவையில்திமுக தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை [மேலும்…]
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய பதற்றங்கள் மற்றும் அதனால் சாமானிய [மேலும்…]
லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற லீமான்ஸ் கப் கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் பங்கேற்ற டீம் விராஜ் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. போட்டி [மேலும்…]
பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
சாலமன் பாப்பையாவின் உடலுக்கு Guard of Honour எனப்படும் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் இந்த மரியாதை நடைபெற்றது. மறைந்த [மேலும்…]