சீன விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியது.
அதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நிலவின் மேற்பரப்பில், அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு துருப்பிடிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் தேவை. ஆனால், இவையிரண்டும் நிலவில் அதிகளவில் கிடையாது. அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக என்ன இருக்கும்?
இதற்கான விடையை அவர்கள் அந்த அறிக்கையில் அளித்துள்ளனர். இந்த துருப்பிடித்தலுக்கு பூமியே காரணம். பூமியின் வளி மண்டலத்தில் இருந்து காற்றானது நிலவுக்கு பயணித்து இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
இதனை அவர்கள் ஆய்வகத்தில் செயற்கையான முறையில் பரிசோதனை செய்து கண்டறிந்து உள்ளனர். இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின்போது, நிலவின் துருவ பகுதிகளில் ஹெமடைட் இருந்தது என கண்டறியப்பட்டது.
இதனை விஞ்ஞானிகள் முன்பே அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த துருப்பிடித்தலை புரிந்து கொள்வதன் வழியே வருங்கால நிலவு தொடர்பான திட்டங்களில் அது தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை காரணமாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல், தனது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் [மேலும்…]
சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளைச் சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் [மேலும்…]
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த பிரவேஷ் வஹி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 30) [மேலும்…]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஒரு முக்கிய திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “இந்திய ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகள் – கிரெடிட் [மேலும்…]