சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஜியான்சாவ் தலைமையிலான பிரதிநிதிக் குழு ஜூலை 17 முதல் 20ஆம் நாள் வரை, “பிரிக்ஸ்+” அரசியல் கட்சிகள் உரையாடலில் பங்கெடுத்து, தென்னாப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பொதுக் கருத்துகளைக் கூட்டாகச் செயல்படுத்தி, கட்சிகளுக்கிடையிலான பரிமாற்றத்தை அதிகரித்து, பிரிக்ஸ் உள்ளிட்ட பலதரப்புக் கட்டுக்கோப்புகளுக்குள் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் என்று இரு தரப்பும் தெரிவித்தன.
