கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் [மேலும்…]
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.74 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளியியல் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மிக முக்கியமான மற்றும் உலகப்புகழ் பெற்ற திருவிழாவான சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. [மேலும்…]
அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி [மேலும்…]
ஆப்பிரிக்கக் கலையைப் பற்றித் தெரிந்துகொள்வது, உங்கள் எண்ணங்களை மாற்றும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இது உங்களுக்குப் புதுப்புது பார்வைகளையும், நல்ல புரிதலையும் கொடுக்கும். [மேலும்…]
ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ உருவாக்கும் கருவியான ‘சோரா’வை (Sora) நேரடியாக சாட்ஜிபிடி (ChatGPT) தளத்துடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) [மேலும்…]