கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 34 கோடி ரூபாய் [மேலும்…]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்ட சமீபத்திய போர் நிறுத்த முன்மொழிவில் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது [மேலும்…]
புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தனி நபர் பயன்பாட்டுக்கு நான்கரை லிட்டர் [மேலும்…]
சீன அரசவையின் தகவல் பணியகம் ஏப்ரல் 28ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சேவைத் தொழிலின் திறன் விரிவாக்கம் மற்றும் தர உயர்வை மேம்படுத்துவதற்கான [மேலும்…]
சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகத்தின் 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்புக்கான அறிமுகக் கூட்டம் ஏப்ரல் 28ஆம் நாள் இந்தோனேசியாவின் [மேலும்…]