கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கிரிக்கெட் மைதானத்தை விட்டு சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று 13 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் வருமானம் ஈட்டுவதில் அவரே அசைக்க முடியாத ‘கிங்’ ஆக [மேலும்…]
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) முதல் ஏப்ரல் [மேலும்…]
வருமானப் பகிர்வு அடிப்படையில் படத்தயாரிப்பை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள மே 2ஆம் தேதி வேலை நிறுத்தம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என தென்னிந்திய [மேலும்…]
புனே மாவட்டத்தில் காளான் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் வடிகால் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று உயிரிழந்தனர். [மேலும்…]
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி-க்கள் [மேலும்…]
இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேச்சுவார்த்தை தொடங்கி, டிசம்பரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், [மேலும்…]
முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி, வங்கதேசத்திற்கான இந்தியாவின் புதிய தூதராக (High Commissioner) நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்…]
விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் கவனம் செலுத்தும் ஒரு புத்தொழில் நிறுவனமான ஓவர்வியூ எனர்ஜியுடன், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. [மேலும்…]