கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
Gen Z இளைஞர்களை பலர் தவறாக வழிநடத்துகிறார்கள். டெல்லிக்கும், இங்குள்ள இளைஞர்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் [மேலும்…]
டெல்லி : சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஃபேஸ்புக் (Facebook) தளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட விவகாரமானது [மேலும்…]
5,105 செயற்கைக்கோள்களை கொண்ட ஒரு புதிய வலையமைப்பை இயக்குவதற்காக, அமேசான் நிறுவனம் கூட்டாட்சித் தொலைத்தொடர்பு ஆணையத்திடம் (FCC) ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது. கைபேசி இணைப்பு [மேலும்…]
பல நாடுகளின் செய்திஊடகங்கள் அண்மையில் தொடர்ந்து வெளியிட்ட செய்திகளின் படி, திறந்த மூலநிரல் மாதிரிகள், அறிவியல் தொழில் நுட்பப் பயன்பாடு மற்றும் திறன் கட்டுமானம் [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 28ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்லோவாக்கிய அரசுத் தலைவர் பீட்டர் பெல்லெக்ரினியுடன் [மேலும்…]
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் வெளிநாடுகளிலுள்ள [மேலும்…]
ஜப்பானின் கியூஷு பிராந்தியத்தில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 4:27 மணிக்கு [மேலும்…]
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லேசான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், தூதரக முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் ஈரான் மீது [மேலும்…]