கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி [மேலும்…]
அமெரிக்காவின் நிர்வாக உத்தரவின் காரணமாக, $800 வரையிலான இறக்குமதி பொருட்களுக்கு இருந்த சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டதால், ஆகஸ்ட் 29 முதல் அனைத்து தபால் [மேலும்…]
இந்தியாவில் 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் என்று காமன்வெல்த் கூட்டமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டியை நடத்த இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத் [மேலும்…]
வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் [மேலும்…]
வயதான முன்னாள் ராணுவத்தினர், ஓய்வூதியம் பெறாத முன்னாள் ராணுவத்தினர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு நிலையான வாழ்நாள் ஆதரவை வழங்கும் வகையில், பயனாளி [மேலும்…]
தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக நெல்லை தென்காசி மற்றும் [மேலும்…]
கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான [மேலும்…]