கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது. தளத்தில் ஏஎன்-32 [மேலும்…]
சென்னை : தமிழக அரசியல் மற்றும் பொதுவெளியில் புதிய பரபரப்பைக் கிளப்பும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ, அவரது புகைப்படங்களையோ எந்த ஒரு [மேலும்…]
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய [மேலும்…]
சீன-ஜார்ஜியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 34ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜார்ஜிய அரசுத் தலைவர் கவிலாஷ்விலி இருவரும் [மேலும்…]
ஜப்பான் தேசிய பாதுகாப்புடன் தொடர்பான 3 ஆவணங்களைத் திருத்துவது குறித்து அரசுக்கு ஒப்படைக்கும் வரைவு ஒன்றை ஜப்பானின் லிப்ரல் ஜனநாயக கட்சி அண்மையில் அங்கீகரித்துள்ளது. [மேலும்…]
யுன்னான் மலர்களின் ராஜ்ஜியம் மட்டுமல்ல, ஒரு முக்கிய காபி உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. இங்கிருந்து 2025இல் 19000 டன் காபி 43நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு [மேலும்…]
அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று (ஜூன் 13) காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்…]
இனி ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் கணக்குகள் குறித்து தகவல் அளிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு நிதியாண்டில் உங்களின் அனைத்து வங்கிக் [மேலும்…]