கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
வங்கக்கடலில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாகப் பெரிய அளவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் தென் மண்டல தேசிய [மேலும்…]
ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து பார்ப்போம். வரும் செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ஒரே நாளில் 14 தமிழ்த் [மேலும்…]
RailOne செயலியில், பதிவு செய்துள்ள ஒருவர் தமக்காக மட்டுமின்றி மேலும் 5 பேருக்கு சீசன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். RailOne செயலியில், பதிவு செய்துள்ள [மேலும்…]
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக பெருவிழா, 2009-ம் ஆண்டுக்குப் பிறகு வியாழக்கிழமை (செப்.17) காலை 7.40 மணி [மேலும்…]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளிக்கால நண்பரான அஸ்கர் அலி வோரா என்பவருக்குச் சொந்தமான நிலம் விவகாரம் ஒன்று தற்போது தேசிய அளவில் பெரும் [மேலும்…]
அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் [மேலும்…]
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் [மேலும்…]
புதிய சர்வதேச தரை-கடல் வர்த்தக வழித்தடத்தின் முக்கியத் திட்டப்பணியான பிங்லு கால்வாய் 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. அதோடு, சீனாவின் [மேலும்…]