கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள நீண்டகால பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) அமெரிக்கா மற்றும் சீனாவை விஞ்சி [மேலும்…]
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, அறிவியல், [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 25ஆம் நாள் நிறைவேற்றியது. அனைத்து நிகழ்ச்சிகளும் சீராகவும் [மேலும்…]
செங்கோட்டையன் அதிமுகவில் ஒற்றுமைக்காக தான் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு அது நடந்து கொண்டுதான் இருக்கிறது என அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
நாம் தமிழர் கட்சியினர் புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, [மேலும்…]
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா [மேலும்…]