அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை  

Estimated read time 0 min read

அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) இஸ்தான்புல்லில் தொடங்கின.

ஆப்கானிஸ்தான் தூதுக்குழுவிற்கு அந்நாட்டின் உள்துறை துணை அமைச்சர் ரஹ்மத்துல்லா முஜிப் தலைமை தாங்குகிறார். அதே சமயம் பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய இருவர் குழு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்த சமீபத்திய பேச்சுவார்த்தைகள் இந்த மாத தொடக்கத்தில் தோஹாவில் கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் நடந்த முதல் சுற்றைத் தொடர்ந்து வந்துள்ளன.
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் ஆக்ரோஷமான கருத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

Please follow and like us:

You May Also Like

More From Author