ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 300 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களில் நகரத்தின் மிக மோசமான தீ விபத்து இதுவாகும்.
மறுசீரமைப்புப் பணியில் இருந்த 32 மாடிக் கட்டிடத்தின் வெளிப்புறத்தை சுற்றியிருந்த மூங்கிலால் ஆன சாரத்தில் நண்பகலில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிட பணிக்காக பயன்படுத்தப்பட்ட வலைகள் மற்றும் பலத்த காற்றின் காரணமாக, தீ விரைவாகப் பரவி, அப்பகுதியில் உள்ள எட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழு குடியிருப்புகளை முழுவதுமாக அழித்தது.
தீப்பிழம்புகள் கட்டிடத்தின் உச்சியில் இருந்து பரவி, அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் வேகமாக பாய்ந்தன.
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்
