மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், கடற்கரையோரம், 1,237 அடி உயரத்தில், 40,000 சதுரடியில், ‘சீல் டவர்’ என்ற பெயரில் வானுயர ஹோட்டல் ஒன்றை, ‘இம்மோ பிரஸ்டீஜ் லிமிடெட்’ என்ற நிறுவனம் திறந்துள்ளது.
கண்ணாடி மாளிகை இந்த ஹோட்டலை, ‘தி பர்ஸ்ட் குரூப்’ என்ற கட்டுமான நிறுவனம் கட்டி கொடுத்துள்ளது. கண்ணாடி மாளிகையாக ஜொலிக்கும் இந்த ஹோட்டலில், மொத்தம் 82 தளங்கள், 1,004 அறைகள் உள்ளன.
”இந்த ஹோட்டல் இவ்வளவு உயரத்தில் கட்ட முதலில் தீர்மானிக்கப்படனில்லை.
”வரைபடங்கள் திருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டபோது இதன் உயரம் எதிர்பாராதவிதமாக அதிகரிக்கப்பட்டது,” என, ‘தி பர்ஸ்ட் குரூப்’பின் தலைமை செயல் அதிகாரி ராப் பர்ன்ஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ”நாங்கள் கண்கவர் கட்டடம் ஒன்றை கட்ட விரும்பினோம். அதற்காக ஒவ்வொரு வசதிகளாக சேர்த்து கொண்டே சென்றோம்.
”இறுதியில், அது உலகின் மிக உயரமான கட்டடமாக மாறியது. உலகின் மிக உயர ஹோட்டலை கட்ட வேண்டும் என, நாங்கள் நிச்சயமாக திட்டமிடவில்லை. இது எதிர்பாராதவிதமாக நடந்தது,” என்றனர்.
ஹோட்டல் உச்சியில் உள்ள, ‘ஸ்கை லவுஞ்ச்’ எனப்படும் ஓய்விடம் மற்றும் பிற உயரமான தளங்களில் இருந்து துபாய் கடற்கரை, பாம் ஜுமேரா மற்றும் வளைகுடாவின் 360 டிகிரி முழுமையான காட்சியை பார்க்க முடியும்.
மேலும், 76வது தளத்தில் காற்றை செலுத்தும் வெற்றிடத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர், வானத்தில் மறைவது போல இருக்கும்.
பாரம்பரியம் செங்குத்தான பூங்காக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன், மேல் தளத்தில் பிரிட்டனை தளமாகக் கொண்ட, ‘டட்டு பிராண்டு’ உட்பட மொத்தம் எட்டு உ ணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல், பிரமாண்ட கட்டடங்களை விரும்பும் துபாயின் பாரம்பரியத்துக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது.
நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் [மேலும்…]
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.74 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளியியல் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மிக முக்கியமான மற்றும் உலகப்புகழ் பெற்ற திருவிழாவான சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. [மேலும்…]
அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி [மேலும்…]
ஆப்பிரிக்கக் கலையைப் பற்றித் தெரிந்துகொள்வது, உங்கள் எண்ணங்களை மாற்றும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இது உங்களுக்குப் புதுப்புது பார்வைகளையும், நல்ல புரிதலையும் கொடுக்கும். [மேலும்…]
ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ உருவாக்கும் கருவியான ‘சோரா’வை (Sora) நேரடியாக சாட்ஜிபிடி (ChatGPT) தளத்துடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) [மேலும்…]