மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், கடற்கரையோரம், 1,237 அடி உயரத்தில், 40,000 சதுரடியில், ‘சீல் டவர்’ என்ற பெயரில் வானுயர ஹோட்டல் ஒன்றை, ‘இம்மோ பிரஸ்டீஜ் லிமிடெட்’ என்ற நிறுவனம் திறந்துள்ளது.
கண்ணாடி மாளிகை இந்த ஹோட்டலை, ‘தி பர்ஸ்ட் குரூப்’ என்ற கட்டுமான நிறுவனம் கட்டி கொடுத்துள்ளது. கண்ணாடி மாளிகையாக ஜொலிக்கும் இந்த ஹோட்டலில், மொத்தம் 82 தளங்கள், 1,004 அறைகள் உள்ளன.
”இந்த ஹோட்டல் இவ்வளவு உயரத்தில் கட்ட முதலில் தீர்மானிக்கப்படனில்லை.
”வரைபடங்கள் திருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டபோது இதன் உயரம் எதிர்பாராதவிதமாக அதிகரிக்கப்பட்டது,” என, ‘தி பர்ஸ்ட் குரூப்’பின் தலைமை செயல் அதிகாரி ராப் பர்ன்ஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ”நாங்கள் கண்கவர் கட்டடம் ஒன்றை கட்ட விரும்பினோம். அதற்காக ஒவ்வொரு வசதிகளாக சேர்த்து கொண்டே சென்றோம்.
”இறுதியில், அது உலகின் மிக உயரமான கட்டடமாக மாறியது. உலகின் மிக உயர ஹோட்டலை கட்ட வேண்டும் என, நாங்கள் நிச்சயமாக திட்டமிடவில்லை. இது எதிர்பாராதவிதமாக நடந்தது,” என்றனர்.
ஹோட்டல் உச்சியில் உள்ள, ‘ஸ்கை லவுஞ்ச்’ எனப்படும் ஓய்விடம் மற்றும் பிற உயரமான தளங்களில் இருந்து துபாய் கடற்கரை, பாம் ஜுமேரா மற்றும் வளைகுடாவின் 360 டிகிரி முழுமையான காட்சியை பார்க்க முடியும்.
மேலும், 76வது தளத்தில் காற்றை செலுத்தும் வெற்றிடத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர், வானத்தில் மறைவது போல இருக்கும்.
பாரம்பரியம் செங்குத்தான பூங்காக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன், மேல் தளத்தில் பிரிட்டனை தளமாகக் கொண்ட, ‘டட்டு பிராண்டு’ உட்பட மொத்தம் எட்டு உ ணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல், பிரமாண்ட கட்டடங்களை விரும்பும் துபாயின் பாரம்பரியத்துக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது.
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஹாங்காங்கின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை(2026-2030) 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. [மேலும்…]
ஜப்பானில் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, விலா தசையில் ஏற்பட்ட காயம் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியுடன் செப்டம்பர் [மேலும்…]
13வது பெய்ஜிங் சியாங்ஷன் மன்றக்கூட்டம் 16ஆம் நாள் பெய்ஜிங் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் இதில் [மேலும்…]
சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் ஜெங் 15ஆம் நாள் 13வது பெய்ஜிங் சியாங்ஷன் மன்றக்கூட்டத்தின் வரவேற்பு விருந்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 15ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், ஆசியான் அமைப்பின் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் 16ஆம் நாள், ச்சிலின் பல்கலைக்கழகத்தின் [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எண்ணியல் பொருளாதார மன்றக் கூட்டம் 15ம் நாள் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் உருமுச்சி நகரில் நடைபெற்றது. இதன் [மேலும்…]