விண்வெளி ஆய்வில் சாதனை படைத்து வரும் இந்தியா, தற்போது ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகம் (NIOT) உருவாக்கியுள்ள ‘மத்ஸ்யா-6000’ (Matsya-6000) என்ற நீர்மூழ்கி வாகனம், வரும் மே 2026-ல் தனது முதல் சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
சுமார் 25 டன் எடை கொண்ட இந்த வாகனம், முதற்கட்டமாக 500 மீட்டர் ஆழம் வரை சென்று ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான இறுதிக்கட்ட ஒருங்கிணைப்பு பணிகள் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள NIOT வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மே 2026-ல் சமுத்ராயன் விண்கலத்தின் முதல் ஆழ்கடல் சோதனை; 500 மீட்டர் ஆழத்தில் ஆய்வு
