இந்திய பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27, 2026) அன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 81,159 நிலைக்கு வந்தது.
அதேபோல், நிஃப்டி 50 குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 25,200 க்கும் கீழே சென்றது. இந்தத் திடீர் சரிவினால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் துடைத்து எறியப்பட்டது.
பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 463 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்தது.
பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: ரூ.5.5 லட்சம் கோடி அவுட்!
