நாட்டிலேயே முதல் இயந்திர யானை சவாரி கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பில், அதிரப்பள்ளியில் உள்ள தும்பூர்முழி தோட்டத்தில் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உண்மையான யானையின் அசைவுகளையும், நடையையும் துல்லியமாகப் பின்பற்றும் இந்த இயந்திர யானையின் மீது அமர்ந்து சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
