“காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறதா?” – டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமி போட்ட அதிரடி ‘குண்டு’..!!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத் தேர்தல் களம் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் சுமுகமாக இருப்பதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீடு குறித்த முறையான பேச்சுவார்த்தைகள் விரைவாகத் தொடங்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

இதனால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி குறித்துக் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அக்கூட்டணியில் கடும் குழப்பம் நிலவி வருவதைப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிய முடிவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தங்கள் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், வரும் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மற்ற கட்சிகள் கூட்டணியில் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் நல்ல முடிவுகள் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author