ஈரானிலிருந்து துருக்மெனிஸ்தானுக்கு வெளியேறிய முதலாவது தொகுதியைச் சேர்ந்த 25 சீன குடிமக்கள் சீனாவுக்கு திரும்ப 4ஆம் நாள் விடியற்காலையில் விமானம் மூலம் புறப்பட்டனர்.
துருக்மெனிஸ்தானுக்கான சீனத் தூதரகம் வெளியிட்ட செய்தியில், ஈரானிலிருந்து வெளியேறும் சீன குடிமக்களுக்கு இயன்ற அளவில் உதவி செய்து, அவர்கள் தடையின்றி தாய்நாட்டுக்குத் திரும்ப ஆதரவளிப்போம் என்று தெரிவித்துள்ளது.
