2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது.
பெய்ஜிங்கை சேர்ந்த தத்துவப் பேராசிரியரான சுயெசின் ஜியாங், தற்போது ‘சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்’ என்று சமூக வலைதளங்களில் கொண்டாடப்படுகிறார்.
தனது ‘பிரிடிக்டிவ் ஹிஸ்டரி’ என்ற யூடியூப் சேனல் மூலம் 2024 மே மாதத்தில் அவர் வெளியிட்ட விரிவுரையில் மூன்று முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்:
1. டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக ஆட்சிக்கு வருவார்.
2. அவர் பதவி ஏற்றதும் ஈரான் மீது போர் தொடுப்பார்.
3. இந்தப் போர் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
‘சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்’ பேராசிரியர் ஜியாங்: USA-ஈரான் போர் குறித்து அவர் கணித்தது பலித்ததா?
