சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியை தாக்கியது.
இதனால் பூமியின் காந்தப்புலத்தில் ஒரு பெரிய இடையூறு ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புவி காந்த புயல் குறித்து பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது என்று கொலராடோவின் போல்டரில் உள்ள NOAA இன் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் தாக்கம் குறைந்துள்ளது என்றும், எனினும், சூரியப் புயல்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் NOAA இன் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் இன்று தெரிவித்துள்ளது.