அதிமுக தோல்விக்கு காரணமே இதுதான்.. போட்டுடைத்த சிவி சண்முகம்…!! 

Estimated read time 1 min read

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விகள் மற்றும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகும் கூட, கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி எந்தவொரு முறையான ஆய்வையும் செய்யவில்லை என்றும், இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து கடுமையாகச் சரிந்து வருகிறது என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலின் போது வலிமையான கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்ததே கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி வைக்க வேண்டும் என்று நாங்கள் அவரிடம் வலியுறுத்தினோம். தவெக-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு நடந்த போதிலும், அதனை இபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டார். அதேபோல், கூட்டணியில் இருந்த தேமுதிக, புதிய தமிழகம் போன்ற தோழமைக் கட்சிகளையும் அவர் முறையாக மதிக்கவில்லை” என்று பகிரங்கமாகத் தெரிவித்தனர்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தங்களை உள்ளிட்ட 6 முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினோம் என்றும், கட்சியைப் பலப்படுத்த ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்றும் கூறினர். ஆனால், கட்சியின் நலன் சார்ந்த அந்த ஆலோசனையையும் இபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டார் என்று எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author