கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் அமெரிக்க- இஸ்ரேல்- ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான திசையை நோக்கி நகர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் “மிகவும் சிறப்பாக” சென்று கொண்டிருப்பதாகவும், இந்த வார இறுதிக்குள்ளேயே இரு நாடுகளும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் சூசகமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையே வார இறுதியில் அமைதி ஒப்பந்தம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்
