பூமியில் இருக்கும் நீரில் ஆக்ஸிஜன் அளவு அபாயகரமான வேகத்தில் குறைவதாக தகவல்  

உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்ஸிஜனின் விநியோகம் வேகமாக குறைந்து வருகிறது என்றும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் எப்படி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இன்றியமையாததாக இருக்கிறதோ அதே போல் நீரில் இருக்கும் ஆக்ஸிஜன் நீர் வாழ் உயிரினங்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.

காலநிலை மாற்றம், கடல் அமிலமயமாக்கல், அடுக்கு மண்டல ஓசோன் சிதைவு, உலகளாவிய பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் சுழற்சிகளில் குறுக்கீடு, பல்லுயிர் இழப்பு விகிதம், உலகளாவிய நன்னீர் பயன்பாடு, நில அமைப்பு மாற்றம், ஏரோசல் ஏற்றுதல் மற்றும் இரசாயன மாசுபாடு ஆகியவை ஏற்கனவே பூமியை பெருமளவு அழிக்கக்கூடிய விஷங்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

More From Author