சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் அனுமதி

Estimated read time 0 min read

செப்டம்பர் 4வது வாரத்தில் சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் 166 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், 3000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி மாணவர்கள் என 6000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 6 வளாகங்களில், 280 க்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளில் சென்னை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் சுமார் 110 க்கு மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரியில் இணைவு பெற்று செயல்படுகின்றன. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவை அறிவிக்கக்கூடிய அதிகாரம் கொண்ட துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பதால் கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் பட்டமளிப்பு விழா நடத்தாமல் பல்கலைக்கழகத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் படித்து முடித்து சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 5 பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் வழங்காமல் இருப்பதால் மாணவர்கள் பாதிப்பு என உயர்கல்வித்துறை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளார். இதைதொடர்ந்து செப்டம்பர் 4வது வாரத்தில் சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author