வங்கதேசத்திற்கு கெடு விதித்த ரஷ்யா… உலக அளவில் திடீர் பதற்றம்..!! 

Estimated read time 1 min read

ரஷ்யா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடன் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யா, ரூப்பூர் அணுமின் நிலையத்திற்காக வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக ரூ.19,000 கோடி வங்கதேசத்திடம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்தத் தொகையை செலுத்த வேண்டும் என கெடு விதித்துள்ளது.

இந்தக் கடன் தொடர்பான ஒப்பந்தம் 2015-ல் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வங்கதேசம் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் இருப்பதால், இந்தப் பணத்தைச் செலுத்தும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது. வங்கதேசம் கால அவகாசம் கோரிய போதிலும், ரஷ்யா அதை மறுத்துவிட்டது.

இந்த சூழ்நிலையில், வங்கதேசம் கடன் தொகையை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து பெரும் கவலை நிலவுகிறது. இந்த சம்பவம், இரண்டு நாடுகளின் பொருளாதார உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வங்கதேசத்தின் பொருளாதார நிலை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author