சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மே 29ஆம் நாள் ஹாங்காங்கில் ஆசியாவின் அமைதி மற்றும் இணக்கத்திற்கான கவுன்சில் தலைவரும், தாய்லாந்தின் முன்னாள் துணைத் தலைமையமைச்சருமான சுரகியார்த் சதிராதையுடன் சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பின் போது வாங் யீ கூறுகையில், சர்வதேச இணக்க அமைப்பை நிறுவ வேண்டும் என சீனா முன்மொழிந்தது. சர்வதேசச் சமூகம் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் சர்ச்சையைத் தீர்த்து, இணக்கத்தை நனவாக்குவதற்கு புதிய தெரிவை இது வழங்கி, பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையாகவும் திகழ்கின்றது என்று தெரிவித்தார்.
மேலும், ஆசியாவுடன் இணைந்து, சீனா-ஆசியான், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, லன்சாங் ஆறு-மெய்கொங் ஆற்று ஒத்துழைப்பு, ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை முதலிய வட்டார அமைப்பு முறையின் பங்கினை வெளிக்கொணர்ந்து, ஆசியாவின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுரகியார்த் சதிராதை கூறுகையில், சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆசியாவின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக மேலதிக பங்காற்றுவதை ஆசிய அமைதி மற்றும் இணக்கக் கவுன்சில் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.