சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் பிறந்ததை பெருமையாக கருதிகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்!

இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆர்ய சமாஜ் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள அவரது பிறந்த இடமான தங்கராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் பிறந்ததை பெருமையாக கருதுவதாக கூறினார்.

அந்த நேரத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதி, நமது மரபுவழி மற்றும் சமூக தீமைகள்  எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நமக்கு எடுத்துக் காட்டினார் என மோடி தெரிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்து சமுதாயத்தின் மரபுவழி மற்றும் சமூக தீமைகள் காரணமாக நமது சமூகத்தை மோசமான வெளிச்சத்தில் காட்ட முயன்றனர் என்றும் அவர் கூறினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று வாதிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை. ஆர்ய சமாஜ் பள்ளிகள் இதற்கான மையமாக உள்ளன. நாடு தற்போது தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் அதை விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சிகளுடன் சமூகத்தை இணைப்பது நமது பொறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author